பங்களாதேஷில் இருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் - திருப்பூர் போன்ற உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பு

வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படும் பங்களாதேஷ் ஆடைகளால், உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட தொழில் வல்லுநர் பிரிவு குற்றச்சாட்டு.


திருப்பூர்: பங்களாதேஷில் இருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படும் ஆடைகளால் திருப்பூர் போன்ற உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட தொழில் வல்லுநர் பிரிவு சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் உள்நாட்டு உற்பத்திக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பங்களாதேஷ் இறக்குமதி ஆடைகள் வரியில்லா ஒப்பந்த மூலம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதற்கு வரியில்லா ஒப்பந்தத்தை சில நாடுகளுடன் ஏற்படுத்தினர். அதே சமயத்தில் இறக்குமதி செய்யும் பொழுது சில பொருட்களுக்கு மறைமுகமாக 12 சதவீதம் வரி (countervailing duty) என்பதை ஜவுளி ஆடைகளின் மீது விதித்து இருந்தார்கள்.

அதன் மூலம் இந்தியாவில் இருந்து ஒருவர் டி-ஷர்ட் போன்ற ஜவுளி வகைகளை பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்யும் பொழுது 12 சதவீதம் இறக்குமதி வரி செலுத்தி விட்டு தான் ஆடைகளை இறக்குமதி செய்ய முடியும் என்று இருந்தது.

அதனால் இந்திய ஆடை உற்பத்தியாளர்களுக்கு எந்தவித போட்டியும் இல்லாமல் இருந்தது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்த பிறகு ஜிஎஸ்டி என்ற பெயரில் IGST மூலம் இந்த 12 சதவீத வரியையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று ஆன பிறகு தான் அதிகப்படியான ஜவுளி ரகங்கள் பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன் மூலம் இந்தியாவின் உற்பத்தியாளர்கள் குறிப்பாக திருப்பூர் போன்ற உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறது.

அவசரமாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் திருப்பூரின் உற்பத்தி இது போன்ற காரணங்களால் பாதித்து வருகிறது என்பதை சிலர் மறைத்து காங்கிரஸ் தான் வரியில்லா ஒப்பந்தத்தை கொண்டு வந்தது என்று மேம்போக்காக சொல்லி வருகிறார்கள்.

ஆனால் 12 சதவீதம் மறைமுக வரியை ஜவுளியின் மீது பங்களாதேஷிடம் விதித்து ஜவுளி துறைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்தது காங்கிரஸ்தான். வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மன்மோகன் சிங் அரசு வங்கதேசத்திற்க்கு அளித்து இருந்தாலும் கூட 12.6 % கவுன்டர்வயலிங் டூட்டி எனப்படும் இறக்குமதிக்கான வரியை நீக்குவதற்க்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

அதுவே இந்திய - திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருந்தது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஒரு நாடு ஒரு வரி என்ற கோட்பாட்டின் கீழ் ஜிஎஸ்டி வரி விதிப்பில் அந்த 12.6 சதவீதம் கவுன்டர்வயலிங் டியூட்டி என்பது நீக்கப்பட்டு IGST அறிமுகப்படுத்தப்பட்டது.

IGST பொருத்தவரை இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் காண வரியை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று ஆன பிறகு எந்தவித இறக்குமதி வரியும் இல்லாமல் எளிதாகிவிட்டது. 2017-18 ஜிஎஸ்டி வந்த பிறகு மிக அபரிமிதமாக இங்கே பங்களாதேஷில் இருந்து ஜவுளி ரகங்கள் இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்து உள்ளது.

ஆனால் இன்றைய பாரதிய ஜனதா அரசின் தவறான ஜிஎஸ்டி நடைமுறை அதை சுக்குநூறு ஆகிவிட்டது என்பதை மறைத்து விடுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...