கேரளா சிறையில் உள்ள இலங்கை முகமது அசாருதினை சந்தித்தாரா ஜமேசா முபின்?

2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தின் அடிப்படையில் கைதான மூன்று நபர்களில் ஒருவர் முகமது அசாருதீன். கேரள சிறையில் உள்ள இவரை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த ஜமேசா சிறையில் சந்தித்தாரா என்ற கோணத்தில் வருகை பதிவேட்டை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: 2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தின் அடிப்படையில் கைதான மூன்று நபர்களில் ஒருவர் முகமது அசாருதீன். இவர் கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் இறந்த ஜமேசா முபின் என்பவர், அசாருதினை கேரள சிறையில் சந்தித்தாரா? என்ற அடிப்படையில், சிறையில் உள்ள வருகை பதிவேட்டில் முபின் கையெழுத்துட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் ஒன்பது தனிப்படையினர் வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை 22 நபர்களை தனிப்படை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில், முகமது தல்கா (25) உக்கடம், முகமது அசாருதீன் (23) உக்கடம், முகமது ரியாஸ் (27) G.M.நகர், ஃபிரோஸ் இஸ்மாயில் (27) G.M.நகர், முகமது நவாஸ் இஸ்மாயில் (26) G.M.நகர் என ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019 ல் கைதான முகமது அசாருதினிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பிருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜமேஷாவிற்கு கார் தந்து உதவிய நபர் யார்? அவர் பின்னணி என்ன? அவர் ஏதேனும் அமைப்பில் இருக்கின்றாரா? என்ற தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...