இருளுடன்‌ போராட வேண்டாம்‌; ஒளி வந்தால்‌ இருள்‌ தானாக நீஈ்கிவிடும்‌ - சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி ஈஷா யோகா மைய நிறுவனர், சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கோவை: இருள்‌ என்னும்‌ அறியாமையுடன்‌ போராட வேண்டாம் தெளிவு என்னும்‌ ஓளியை ஏற்றினால்‌ அறியாமை என்னும் இருள்‌ தானாக மறைந்துவிடும்‌ என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி அறிக்கையில், கலாச்சார நீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர்‌ வதம்‌ செய்த தினமாகவும்‌, வனவாசம்‌ முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள்‌ தபங்களுடன்‌ வரவேற்ற தினமாகவும்‌ கொண்டாடப்படுகிறது.

அடிப்படையில்‌, இந்நாள்‌ அறியாமையை வீழ்த்தி தெளிவு என்னும்‌ வெற்றியை பெறும்‌ சாத்தியத்தை குறிக்கும்‌ நாளாகும்‌. தபம்‌ என்றால்‌ வெளிச்சம்‌. பொதுவாக வெளிச்சம்‌ தெளிவோடும்‌, இருள்‌ அறியாமையோடும்‌ ஒப்பிடப்படுகிறது.

இருள்‌ என்பது வெளியில்‌ இருந்தாலும்‌, நமக்குள்‌ இருந்தாலும்‌ நம்‌ கண்‌ முன்‌ இருப்பதே நமக்கு புரியாது. தீபாவளி என்பது வெறும்‌ வீட்டில்‌ விளக்கேற்றும்‌ தினம்‌ கிடையாது. நமக்குள்ளும்‌ விளக்கு ஏற்ற வேண்டும்‌.

வீட்டில்‌ விளக்கு ஏற்றுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள்‌ இருககிறது. மின்‌ விளக்குகள்‌ இல்லாத காலத்தில்‌ எண்ணெய்‌ விளக்கு என்பது மிகவும்‌ முக்கியமான விஷயமாக இருந்தது.

அப்போது சூரியன்‌ மறைந்த பிறகு விளக்கின்‌ தேவை அத்தியாவசியமானதாக இருந்தது. அதன்‌ முக்கியத்துவத்தை நீங்கள்‌ உணர வேண்டுமென்றால்‌, தீபாவளி நாளன்று மின்‌ விளக்குகளுக்கு பதிலாக எண்ணெய்‌ விளக்குகளை வீட்டில்‌ ஏற்றுங்கள்‌.

அப்படி செய்தால்‌, அதன்‌ தாக்கத்தையும்‌ ஆனந்தத்தையும்‌ நீங்கள்‌ உணர்வீர்கள்‌. அது வீட்டின்‌ சூழ்நிலையையே மாற்றிவிடும்‌. பூஜை அறையில்‌ தினமும்‌ எண்ணெய்‌ விளக்குகளை ஏற்றினால்‌, உங்கள்‌ ஆரோக்கியமும்‌ மேம்படும்‌.

வெளியில்‌ மட்டுமின்றி உங்களுக்கு உள்ளும்‌ வெளிச்சம்‌ வரவேண்டும்‌. உங்களுக்குள்‌ தெளிவை ஏற்படுத்த ஈஷாவின்‌ மூலம்‌ பல யோக கருவிகளை நாங்கள்‌ இலவசமாக வழங்குகிறோம்‌. அதனை நீங்கள்‌ பயன்படுதீதி கொள்ளலாம்‌.

அறியாமை என்னும்‌ இருளை நீக்குவதற்கு அதனுடன்‌ நீங்கள்‌ போராட கூடாது. இருள்‌ நிறைந்த ஒரு இடத்தில்‌ ஒரு ஒளி விளக்கை ஏற்றினால்‌, இருள்‌ காணாமல்‌ போய்விடும்‌.

அதேபோல்‌, தெளிவு பிறந்தால்‌ அறியாமை இல்லாமல்‌ போய்விடும்‌. இந்த தீபாவளி திருநாள்‌ உங்கள்‌ வாழ்வில்‌ ஒரு மகத்தான நாளாக இருக்க வேண்டும்‌ என்னுடைய ஆசை, என்னுடைய அருள்‌.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...