கோவையில் நள்ளிரவில் சாலையில் நின்றிருந்த ஆட்டோ கண்ணாடியை அடுத்து உடைத்த மர்ம நபர் - பரபரப்பு

போத்தனூர் அடுத்த முத்தையா நகரில் சாலையில் நின்றிருந்த ஆட்டோவின் கண்ணாடியை அடித்து உடைத்த மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் முதலியார் வீதி, முத்தையா நகர் பகுதியை சேர்ந்தவர் தனகோபாலசாமி மகன் இமயநாதன் (43). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்று பணி முடிந்து சென்ற இமயநாதன் வீட்டின் அருகே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனிடையே நள்ளிரவில் அவரது வீட்டின் அருகே கண்ணாடி உடையும் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது, இமயநாதன் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இமயநாதன் உடனடியாக அருகே சென்று அவரிடம் கேட்டபோது, அந்த மர்ம நபர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுதொடர்பாக, இமய நாதன் போத்தனூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆட்டோ கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...