கோவையில் நள்ளிரவில் சாலையில் நின்றிருந்த ஆட்டோ கண்ணாடியை அடுத்து உடைத்த மர்ம நபர் - பரபரப்பு

போத்தனூர் அடுத்த முத்தையா நகரில் சாலையில் நின்றிருந்த ஆட்டோவின் கண்ணாடியை அடித்து உடைத்த மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் முதலியார் வீதி, முத்தையா நகர் பகுதியை சேர்ந்தவர் தனகோபாலசாமி மகன் இமயநாதன் (43). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்று பணி முடிந்து சென்ற இமயநாதன் வீட்டின் அருகே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனிடையே நள்ளிரவில் அவரது வீட்டின் அருகே கண்ணாடி உடையும் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது, இமயநாதன் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இமயநாதன் உடனடியாக அருகே சென்று அவரிடம் கேட்டபோது, அந்த மர்ம நபர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுதொடர்பாக, இமய நாதன் போத்தனூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆட்டோ கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...