கோவையில் நள்ளிரவில் சாலையில் நின்றிருந்த ஆட்டோ கண்ணாடியை அடுத்து உடைத்த மர்ம நபர் - பரபரப்பு

போத்தனூர் அடுத்த முத்தையா நகரில் சாலையில் நின்றிருந்த ஆட்டோவின் கண்ணாடியை அடித்து உடைத்த மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் முதலியார் வீதி, முத்தையா நகர் பகுதியை சேர்ந்தவர் தனகோபாலசாமி மகன் இமயநாதன் (43). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்று பணி முடிந்து சென்ற இமயநாதன் வீட்டின் அருகே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனிடையே நள்ளிரவில் அவரது வீட்டின் அருகே கண்ணாடி உடையும் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது, இமயநாதன் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இமயநாதன் உடனடியாக அருகே சென்று அவரிடம் கேட்டபோது, அந்த மர்ம நபர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுதொடர்பாக, இமய நாதன் போத்தனூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆட்டோ கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...