கோவை சாய்பாபா காலணி அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 சவரன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சாய்பாபா காலணி அருகே வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர் பகுதியில், கடந்த சில மாதங்களாக வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சாலையில் நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளை குறிவைத்தே இந்த சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

அதுமட்டுமல்லாது இரவில் வெளியூர் செல்பவர்கள் மற்றும் வேலை முடிந்து வீடு திரும்புபவர்களும் அவர்களது இலக்காக இருக்கிறது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசாரும் குற்றவாளிகளை கைது செய்து வருவது மட்டுமல்லாமல் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கே.கே.புதூர் சின்னசாமி வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அம்சவேணி (73). இவர் சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பணி முடிந்து வழக்கம் போல் சாய்பாபா காலனி கிருஷ்ணா நகர் சாலையில் நடந்து வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அம்சவேணியின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக அம்சவேணி சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...