வால்பாறை தேயிலை தோட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த ட்ராக்டர் - வடமாநில தொழிலாளி படுகாயங்களுடன் மீட்பு

கோவை வால்பாறை தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிப்பதற்காக வந்த ட்ராக்டர் கட்டுப்பாட்டை இழந்து மலை பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளி காட்டு பகுதியில் இருந்து மீட்கபட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.



கோவை: வால்பாறை அருகே மானிக்கா எஸ்டேட் பகுதியில் காலை 8 மணி அளவில் தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிப்பதற்காக எஸ்டேட் மருந்து கிடங்கில் இருந்து வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகிய இருவரும் டிராக்டர் மூலம் வந்துள்ளனர்.

அவர்கள் மருந்தை எடுத்து கொண்டு 38 ம் நம்பர் தோட்டத்திற்கு சென்று உள்ளனர். டிராக்டரை வட மாநில தொழிலாளி சஞ்சய் இயக்கியதாக கூறப்படுகிறது. மலைப்பாதையில் செல்லும் பொழுது ட்ராக்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மலை பாதையில் இருந்ந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது.



இதில் வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகியவர்கள் பலத்த காயங்களுடன் காட்டிற்குள் விழுந்தனர். டிராக்டர் மலையில் விழுந்ததில் சுக்குநூறாக உடைந்துள்ளது.



தேயிலை தோட்டத்தில் வேலைக்கு வந்தவர்கள் டிராக்டர் விழுந்த சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முருகன் என்பவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது ஆனால் டிராக்டர் இயக்கிய சஞ்சய் பலத்த காயம் அடைந்து உள்ளார். இவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...