கோவையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல முண்டியடிக்கும் மக்கள் - பேருந்துகளில் இடம்பிடிக்க அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்காக பொதுமக்களும், மாணவ - மாணவிகளும் அலைமோதுவதால், கூடுதல் பேருந்துகளை இயக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.


கோவை: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.



இந்நிலையில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் பேருந்துகளில் இடம் பிடிக்க மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.



இன்று கல்லூரிகள் அனைத்தும் முடிந்த நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியாக தங்கி படிக்கும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் சொந்த ஊர் செல்கின்றனர்.



இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கல்லூரிகள் மாலை முடிந்த உடன் மாணவ மாணவிகள் சொந்த ஊருக்கு பேருந்துகளிலும் ரயில்களிலும் திரும்பி வருகின்றனர்.



இதனால் கோவை மாவட்டத்தில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களில் மாணவர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்படுகிறது.



காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் பேருந்து நிலையத்திற்கு வெளியே என மாணவர்கள் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.



இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்து நிலையத்திற்குள் நுழையும் முன்பே மாணவர்கள் பேருந்தை வழிமறித்தவாறு பேருந்தில் அவர்களது உடைமைகளை கொண்டு இடம் பிடித்தனர். இதனால் பெருமளவில் சலசலப்பும் அதிகபட்சமான தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், பேருந்து ஏறுவதில் ஏற்படும் ஒழுக்க கெடுகளை சரியான முறையில் ஒழுங்குபடுத்தவும், கூடுதல் பேருந்துகளை இயக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...