கோவை பச்சாகவுண்டம்பாளையம் அருகே வியாபாரியை தாக்கி வழிப்பறி - வாகன சோதனையில் கொள்ளையர்களை கைது செய்த போலீசார்

பச்சாகவுண்டம்பாளையம் அருகே வியாபாரியை தாக்கி ரூ.2.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யபிரகாஷ், மதுரையை சேர்ந்த அன்பழகன் ஆகியோரை வாகன சோதனையின் போது போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை புறநகர் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. பணியை முடித்துவிட்டு வீடு திரும்பவோர் அல்லது இரவு நேரத்தில் வெளியூருக்கு பயணிப்போரிடம் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். வழிப்பறியில் ஈடுபட்டு பறிக்கப்பட்ட பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு விக்னேஸ்வரன் என்பவர் பச்சாகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது காய்கறி கடையை மூடிவிட்டு மண்டியிலிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது வியாபாரத்தை முடித்த கையோடு ஒரு குறிப்பிட்ட ரொக்க பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையறிந்த இரண்டு வாலிபர்கள் விக்னேஸ்வரனை பின்தொடர்ந்து வந்து கட்டையால் அடித்துள்ளனர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், விக்னேஷ்வரனிடம் இருந்து 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை அந்த வழிப்பறி கும்பல் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் விக்னேஸ்வரன் புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும், எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் அப்பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு சந்தேகப்படும் படியாக இருவர் உலா வருவதனை பார்த்த காவல் ஆய்வாளர் மாதையன், அவர்களை பிடித்து விசாரித்துள்ளார். அதில் விக்னேஸ்வரனை கட்டையால் அடித்து இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாயை வழிப்பறி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யபிரகாஷ், மதுரையை சேர்ந்த அன்பழகன் என்பது தெரியவந்தது.

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்கள் வேறு ஏதேனும் குற்றங்களில், வழிப்பறிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.



மேலும் இருவரிடம் இருந்த பணத்தை மீட்ட போலீசார், உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...