கோவையில் பணியின் போது போல்ட் நட்டை விழுங்கிய எலக்ட்ரீசியன் - சவாலான அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்..!

இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில் உள்ள மூச்சுக் குழாயில் போல்ட் நட் சிக்கியுள்ளது ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மிகுந்த சவாலான அறுவை சிகிச்சையை கோவை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை, பிரிவு தலைவர் டாக்டர். அலி சுல்தான் தலைமையிலான மருத்துவர்கள் செய்து அவரை காப்பாற்றியுள்ளனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதின் (55). எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி செய்யும் போது வாயில் வைத்திருந்த போல்ட் நட்டை தெரியாமல் விழுங்கி விட்டார்.

இதனால் ஏற்பட்டமூச்சு திணறல் காரணமாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காது மூக்கு தொண்டை பிரிவில் நேற்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து,உடனடியாக அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவர் விழுங்கிய போல்ட்நட், அவரது இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில் உள்ள மூச்சுக் குழாயில் சிக்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது.



உடனடியாக அந்த நபருக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து அந்த போல்ட் நட் அகற்றப்பட்டது. தற்போது, அவர் அறுவை சிகிச்சை முடிந்து நன்றாக உள்ளார்.

இந்த சிறப்பு அறுவை சிகிச்சை காது மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியர் Dr.A.R.அலி சுல்தான் தலைமையில், DR.V.சரவணன், மயக்கவியல் மருத்துவர்கள் மணிமொழிச் செல்வன் மதனகோபாலன் மற்றும் மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்தனர்.



பெரும் சவாலான இந்த அறுவை சிகிச்சையை செய்து முடிந்த மருத்துவ குழுவினரை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் அ. நிர்மலா பாராட்டினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...