கோவை வால்பாறையில் வீட்டை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - பரபரப்பு..!

வால்பாறை அருகேயுள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த குட்டியுடன் கூடிய 6 காட்டு யானைகள், நேற்றிரவு, முரளி என்பவரது வீட்டின் சுவர் மற்றும் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



இந்நிலையில் வால்பாறை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதியில் நேற்றைய தினம் குட்டியுடன் 6 காட்டு யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி சுற்றித்திரிந்து வருகின்றன.

இதனிடையே, இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அந்த காட்டு யானைகள் கூட்டம், அப்பகுதியை சேர்ந்த முரளி என்பவரது வீட்டின் சுவரை இடித்து சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் ஜன்னல்களையும் உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் யானைகள் சாலையில் நடந்து சென்று வழிகாட்டும் பதாகைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளன. இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர்.

இந்நிலையில், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள், காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...