கோவை வால்பாறையில் வீட்டை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - பரபரப்பு..!

வால்பாறை அருகேயுள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த குட்டியுடன் கூடிய 6 காட்டு யானைகள், நேற்றிரவு, முரளி என்பவரது வீட்டின் சுவர் மற்றும் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



இந்நிலையில் வால்பாறை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதியில் நேற்றைய தினம் குட்டியுடன் 6 காட்டு யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி சுற்றித்திரிந்து வருகின்றன.

இதனிடையே, இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அந்த காட்டு யானைகள் கூட்டம், அப்பகுதியை சேர்ந்த முரளி என்பவரது வீட்டின் சுவரை இடித்து சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் ஜன்னல்களையும் உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் யானைகள் சாலையில் நடந்து சென்று வழிகாட்டும் பதாகைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளன. இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர்.

இந்நிலையில், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள், காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...