கிணத்துக்கடவு மலுமிச்சம்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி கைது கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து கிணத்துக்கடவு மலுமிச்சம்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர் .

எடப்பாடி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டியில் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பொள்ளாச்சி கோவை சாலையில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை கலைத்தனர் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, ஒத்தக்கால் மண்டபம் நகரச் செயலாளர் ரமேஷ்,செட்டிபாளையம் நகர செயலாளர் கண்டியப்பன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...