கோவையில் இளம்பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் - அழகான பெண் குழந்தை பிறந்தது

நம்.4 வீரபாண்டி அருகே மணிமேகலை என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.



கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி மணிமேகலை (26). நிறைமாத கர்ப்பினியான மணிமேகலைக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த காரமடை ஆம்புலன்சில் மணிமேகலையை அழைத்துச் சென்றனர். ஆனால் அவருக்கு குழந்தை வெளியே வர துவங்கியதால், ஆம்புலன்சில் இருந்த மருத்துவரே பிரசவம் பார்த்துள்ளார்.

மருத்துவர் பிரசவம் பார்ப்பதற்கு, உறவினர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கிலி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர். இதில் மணிமேகலைக்கு ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து இருவரும் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இருவரையும் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தாய் - சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...