கோவையில் இளம்பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் - அழகான பெண் குழந்தை பிறந்தது

நம்.4 வீரபாண்டி அருகே மணிமேகலை என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.



கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி மணிமேகலை (26). நிறைமாத கர்ப்பினியான மணிமேகலைக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த காரமடை ஆம்புலன்சில் மணிமேகலையை அழைத்துச் சென்றனர். ஆனால் அவருக்கு குழந்தை வெளியே வர துவங்கியதால், ஆம்புலன்சில் இருந்த மருத்துவரே பிரசவம் பார்த்துள்ளார்.

மருத்துவர் பிரசவம் பார்ப்பதற்கு, உறவினர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கிலி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர். இதில் மணிமேகலைக்கு ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து இருவரும் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இருவரையும் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தாய் - சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...