கோவையில் வரும் 25ஆம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம் - மாநகர ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உடன்பாடில்லை எனக்கூறி, வரும் 25ஆம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு.



கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்-2 தேதி மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினரை, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் அப்போது, அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சு வார்த்தையின் போது கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனால் தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இன்று கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மற்றும் இதர பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கையான சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக அரசின் அனுமதி வேண்டி கருத்துரு அனுப்பலாம் என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் எடுத்த முடிவு தான் இது என்றும், இந்த தீர்மானத்தில் தங்கள் கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி மீண்டும் வரும் தீபாவளி முதல் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்பார்த்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எண்ணி பட்டாசு, மாலைகளுடன் மாநகராட்சி வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் இன்று மாநகராட்சி மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உடன்பாடு இல்லாததால், வாங்கி வந்த மாலையை வீசி எரிந்ததோடு மாநகராட்சி அலுவலகம் முன்பாக அமர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றும் வரை தங்களது இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...