சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவி குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
,
கோவை: சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி சட்டப்பேரவையில் நேற்றைய தினம்,அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள்சென்னையில் இன்றும் சட்டமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் காவல்துறையினரால் கைது செய்யபட்டனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் தர்ணா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடிய அதிமுகவினர் கட்சி கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகேசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், அதிமுக எதிர்கட்சி தலைவர் உள்பட அதிமுகவினரை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
அதிமுகவினரின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை: சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி சட்டப்பேரவையில் நேற்றைய தினம்,அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள்சென்னையில் இன்றும் சட்டமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் காவல்துறையினரால் கைது செய்யபட்டனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் தர்ணா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடிய அதிமுகவினர் கட்சி கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகேசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், அதிமுக எதிர்கட்சி தலைவர் உள்பட அதிமுகவினரை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
அதிமுகவினரின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.