எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து கோவையில் அதிமுகவினர் திடீர் சாலை மறியல் - பரபரப்பு..!

சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவி குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

,


கோவை: சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி சட்டப்பேரவையில் நேற்றைய தினம்,அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.



இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள்சென்னையில் இன்றும் சட்டமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் காவல்துறையினரால் கைது செய்யபட்டனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் தர்ணா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடிய அதிமுகவினர் கட்சி கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகேசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில், அதிமுக எதிர்கட்சி தலைவர் உள்பட அதிமுகவினரை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

அதிமுகவினரின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...