கோவையில் தீபாவளி விழாக்கால சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பயணிகளுக்கான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.


கோவை: தீபாவளி பண்டிகை நெருங்க உள்ளதை தொடர்ந்து மக்கள் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் ஊர்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் தீபாவளி விழாக்கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்தும், காந்திபுரம் உக்கடம் சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்தும் அதிகளவு பேருந்துகள் இயக்கப்படும், அதே சமயம் கொடிசியா மைதானத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.



அதன்படி, தற்போது மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம் சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் இயங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், குடிநீர் வசதிகள் போன்றவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...