தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

தமிழ்நாடு நாளை முன்னிட்டு கோவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


கோவை: தமிழ்நாடு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகியவை நடத்தபட்டது.

கோவை மாவட்டத்திலும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் போட்டிகள் நடத்தபட்டன. அதில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டு சான்றிதழ்களையும் ரொக்கப்பரிசினையும் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.



பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற அன்னூர் கே.ஜி பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி நிவேதிதாவுக்கும், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.கே.ரங்கம்மாள் கல்வி நிலையம் மேல்நிலை பள்ளியின் 12ம் வகுப்பு மாணவி ஹேமலதாவிற்கும், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில், வெற்றி பெற்ற கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளி, 12ம் வகுப்பு மாணவி ரோஹினி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீ இராமகிருஷ்ணாமிஷின் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி இளநிலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவர் இராபின் ஜோஸ்வா ஆகியோருக்கு முதல் பரிசாக தலா 5000 ரூபாய் காசோலையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தலா 3000 ரூபாய் காசோலை சான்றிதழ்கள். மூன்றால் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தலா 2000 ரூபாய் காசோலை மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசாக 2000 ரூபாய் காசோலை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...