தமிழ்நாடு நாளை முன்னிட்டு கோவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கோவை: தமிழ்நாடு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகியவை நடத்தபட்டது.
கோவை மாவட்டத்திலும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் போட்டிகள் நடத்தபட்டன. அதில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டு சான்றிதழ்களையும் ரொக்கப்பரிசினையும் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற அன்னூர் கே.ஜி பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி நிவேதிதாவுக்கும், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.கே.ரங்கம்மாள் கல்வி நிலையம் மேல்நிலை பள்ளியின் 12ம் வகுப்பு மாணவி ஹேமலதாவிற்கும், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில், வெற்றி பெற்ற கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளி, 12ம் வகுப்பு மாணவி ரோஹினி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீ இராமகிருஷ்ணாமிஷின் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி இளநிலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவர் இராபின் ஜோஸ்வா ஆகியோருக்கு முதல் பரிசாக தலா 5000 ரூபாய் காசோலையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தலா 3000 ரூபாய் காசோலை சான்றிதழ்கள். மூன்றால் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தலா 2000 ரூபாய் காசோலை மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசாக 2000 ரூபாய் காசோலை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்திலும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் போட்டிகள் நடத்தபட்டன. அதில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டு சான்றிதழ்களையும் ரொக்கப்பரிசினையும் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற அன்னூர் கே.ஜி பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி நிவேதிதாவுக்கும், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.கே.ரங்கம்மாள் கல்வி நிலையம் மேல்நிலை பள்ளியின் 12ம் வகுப்பு மாணவி ஹேமலதாவிற்கும், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில், வெற்றி பெற்ற கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளி, 12ம் வகுப்பு மாணவி ரோஹினி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீ இராமகிருஷ்ணாமிஷின் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி இளநிலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவர் இராபின் ஜோஸ்வா ஆகியோருக்கு முதல் பரிசாக தலா 5000 ரூபாய் காசோலையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தலா 3000 ரூபாய் காசோலை சான்றிதழ்கள். மூன்றால் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தலா 2000 ரூபாய் காசோலை மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசாக 2000 ரூபாய் காசோலை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.