திருப்பூர் பல்லடத்தில் கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை வைத்து 300 கிலோ குட்கா கடத்தல் - பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை

பல்லடம் அருகே போலீசாரின் வாகன சோதனையில் புத்தம் புதிய கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை வைத்து கடத்தி செல்லப்பட்ட 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் டி.எஸ்.பி செளமியா மற்றும் காவல் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர், பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக புத்தம் புதிய கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது.

இந்நிலையில், அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார், சோதனை மேற்கொண்டனர். அதில், ஜெயம் பேக்கர்ஸ், மூவர்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது, ஆனால், அந்த கண்டெய்னர் காலியாக இருந்துள்ளது.



இதுகுறித்து ஓட்டுனரிடம் கேட்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.



இதனால் சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தின் உள்ளே சென்று பார்த்த பொழுது வாகனத்தின் வெளிப்புறம் இருந்த நீளத்திற்கும் உள்புறம் இருந்த நீளத்தின் அளவிற்கும் வித்தியாசம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.



இதனையடுத்து, போலீசார் வாகனத்தை முழுவதுமாக சோதனை செய்ததில், வாகனத்தின் உட்புறம் 3×8 என்ற அளவில் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையை திறந்து பார்த்த பொழுது உள்ளே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கண்டெய்னர் லாரி திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்த டைட்டஸ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியதும், இன்னும் பதிவு எண் வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.

குட்காவை கடத்தி செல்வதற்காகவே கண்டெய்னர் லாரி வாங்கி, அதில் ரகசிய அறை அமைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் லோகேஸ்வரனை (23) போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான வாகன உரிமையாளர் டைட்டஸ் என்பவரை தேடி வருகின்றனர்.



இதனிடையே ரூ.23 லட்சம் மதிப்பிலான புத்தம் புதிய கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த 300 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

குட்கா கடத்தி செல்வதற்காகவே புதிய கண்டெய்னர் லாரி வாங்கி அதில் ரகசிய அறை அமைத்தது போலீசார் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...