தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாநகரில் 'போலீஸ் அக்கா' திட்டம் அமல் - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

போலீஸ் அக்கா திட்டத்தின் மூலம் மாணவ - மாணவிகளின் நலனுக்காக கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தலா ஒரு பெண் காவல் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உத்தரவின் பேரில் தமிழக காவல்துறையில் முன்மாதிரி திட்டமாக கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களின் நலன் கருதி "போலீஸ் அக்கா" என்ற சேவை துவங்கப்பட்டுள்ளது.



கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடுவது, அவ்வப்போது பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாணவியர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது.

கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் சம்மந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பது.

கல்லூரி மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக (போலீஸ் அக்காவாக) செயல்பட்டு அவர்கள் கொடுக்கும் தகவல்களை ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.



காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திட்டத்தின் துவக்க விழாவில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் காவல் துணை ஆணையர் சுஹாசினி உட்பட கோவை மாநகரத்தில் உள்ள 60 கல்லூரி நிர்வாகிகள் மற்றும் 37 பெண் காவலர்கள் (போலிஸ் அக்காக்கள்) கலந்து கொண்டனர்.



இந்த புதிய திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...