தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாநகரில் 'போலீஸ் அக்கா' திட்டம் அமல் - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

போலீஸ் அக்கா திட்டத்தின் மூலம் மாணவ - மாணவிகளின் நலனுக்காக கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தலா ஒரு பெண் காவல் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உத்தரவின் பேரில் தமிழக காவல்துறையில் முன்மாதிரி திட்டமாக கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களின் நலன் கருதி "போலீஸ் அக்கா" என்ற சேவை துவங்கப்பட்டுள்ளது.



கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடுவது, அவ்வப்போது பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாணவியர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது.

கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் சம்மந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பது.

கல்லூரி மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக (போலீஸ் அக்காவாக) செயல்பட்டு அவர்கள் கொடுக்கும் தகவல்களை ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.



காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திட்டத்தின் துவக்க விழாவில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் காவல் துணை ஆணையர் சுஹாசினி உட்பட கோவை மாநகரத்தில் உள்ள 60 கல்லூரி நிர்வாகிகள் மற்றும் 37 பெண் காவலர்கள் (போலிஸ் அக்காக்கள்) கலந்து கொண்டனர்.



இந்த புதிய திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...