கோவை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க மறுவாய்ப்பு - மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு

முன்னாள் படை வீரர்கள், அசல் படை விலகு சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் 18 மாத கால சலுகையை பயன்படுத்தி தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்து, உரிய காலத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலைவாய்ப்பு பதிவு செய்யாதவர்கள் மற்றும் பதிவை புதுப்பிக்க தவறிய 55 வயதுக்குள் உள்ள முன்னாள் படை வீரர்கள், 18 மாத கால அளவு சலுகையை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பதிவு செய்து பயன்பெறலாம்.

இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய, அசல் படை விலகு சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தினை நேரில் அணுகலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...