கோவை பொள்ளாச்சி அருகே லாரியில் கடத்தப்பட்ட 2 டன் குட்கா பறிமுதல் - 5 பேர் கைது

பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் சாலையில் வாகன சோதனையின் போது, லாரியில் கடத்திச் சென்ற 2 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தூத்துக்குடி, நெல்லை மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், வால்பாறை உட்கோட்ட டி.எஸ்.பி கீர்த்திவாசன் தலைமையில் போலீசார், பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் சாலையில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் சதீஷ்(22), சத்யா (21), செந்தில்(43), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தஅருள்குமார் (36), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ்(21) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.



மேலும், அவர்கள் விற்பனைக்காக கடத்திச் சென்ற சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள2 டன்எடை கொண்ட குட்கா பொருட்கள், ரூ.16,200/- பணம் மற்றும் நான்கு சக்கர வாகனம்-2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரே நாளில் 2 டன் அளவிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...