பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் சாலையில் வாகன சோதனையின் போது, லாரியில் கடத்திச் சென்ற 2 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தூத்துக்குடி, நெல்லை மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், வால்பாறை உட்கோட்ட டி.எஸ்.பி கீர்த்திவாசன் தலைமையில் போலீசார், பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் சாலையில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் சதீஷ்(22), சத்யா (21), செந்தில்(43), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தஅருள்குமார் (36), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ்(21) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் விற்பனைக்காக கடத்திச் சென்ற சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள2 டன்எடை கொண்ட குட்கா பொருட்கள், ரூ.16,200/- பணம் மற்றும் நான்கு சக்கர வாகனம்-2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரே நாளில் 2 டன் அளவிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பொள்ளாச்சி வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், வால்பாறை உட்கோட்ட டி.எஸ்.பி கீர்த்திவாசன் தலைமையில் போலீசார், பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் சாலையில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் சதீஷ்(22), சத்யா (21), செந்தில்(43), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தஅருள்குமார் (36), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ்(21) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் விற்பனைக்காக கடத்திச் சென்ற சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள2 டன்எடை கொண்ட குட்கா பொருட்கள், ரூ.16,200/- பணம் மற்றும் நான்கு சக்கர வாகனம்-2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரே நாளில் 2 டன் அளவிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.