உலக உடற்காய தினம்: உறுதிமொழி ஏற்றுக் கொண்ட கோவை மாவட்ட காவல்துறையினர்

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தலைமையில், உலக உடற்காய தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


கோவை: ஆண்டுதோறும் அக்டோபர் 17ஆம் தேதி உலக உடற்காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான காலக்கட்டத்தில் உயிரை பாதுகாத்து, உடற்காயங்களால் உண்டாகும் மரணத்தை தவிர்த்து, உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக உடற்காய தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், தலைமையில் உலக உடற்காய தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில், சாலை விபத்துகள், தீ விபத்துகள், கட்டிட இடிபாடு போன்ற பல்வேறு விபத்துகளால் நமக்கு உடற்காயங்கள் ஏற்படுகிறது, இதனால் நமது உறவினர்களும் நண்பர்களும் பாதிக்கப்படுவதுடன் அவர்களுக்கு உடல் உறுப்புகள் பாதிப்பும், மன பாதிப்புகள்ஏற்படுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம் என்றும், சாலை விபத்துகளில் காயம் அடைந்தோருக்கு முதலுதவி செய்தும் அவர்களது உயிரை காப்பாற்றுவதற்கு முக்கிய பங்காற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர், காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உடற்காய தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...