கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தலைமையில், உலக உடற்காய தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கோவை: ஆண்டுதோறும் அக்டோபர் 17ஆம் தேதி உலக உடற்காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான காலக்கட்டத்தில் உயிரை பாதுகாத்து, உடற்காயங்களால் உண்டாகும் மரணத்தை தவிர்த்து, உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக உடற்காய தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், தலைமையில் உலக உடற்காய தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில், சாலை விபத்துகள், தீ விபத்துகள், கட்டிட இடிபாடு போன்ற பல்வேறு விபத்துகளால் நமக்கு உடற்காயங்கள் ஏற்படுகிறது, இதனால் நமது உறவினர்களும் நண்பர்களும் பாதிக்கப்படுவதுடன் அவர்களுக்கு உடல் உறுப்புகள் பாதிப்பும், மன பாதிப்புகள்ஏற்படுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம் என்றும், சாலை விபத்துகளில் காயம் அடைந்தோருக்கு முதலுதவி செய்தும் அவர்களது உயிரை காப்பாற்றுவதற்கு முக்கிய பங்காற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர், காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உடற்காய தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், தலைமையில் உலக உடற்காய தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில், சாலை விபத்துகள், தீ விபத்துகள், கட்டிட இடிபாடு போன்ற பல்வேறு விபத்துகளால் நமக்கு உடற்காயங்கள் ஏற்படுகிறது, இதனால் நமது உறவினர்களும் நண்பர்களும் பாதிக்கப்படுவதுடன் அவர்களுக்கு உடல் உறுப்புகள் பாதிப்பும், மன பாதிப்புகள்ஏற்படுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம் என்றும், சாலை விபத்துகளில் காயம் அடைந்தோருக்கு முதலுதவி செய்தும் அவர்களது உயிரை காப்பாற்றுவதற்கு முக்கிய பங்காற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர், காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உடற்காய தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.