இந்து மத சர்ச்சை: வழக்கு போடச் சொல்லி சவால் விடுத்த ஆ.ராசா - போடப்பட்ட வழக்கும் தள்ளுபடி

இந்து மதம், இந்து மத பெண்கள் குறித்து தவறாக பேசியதாகவும், திமுக எம்.பி ஆ.ராசா நடவடிக்கடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.


சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பியும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா கலந்துகொண்டார். அப்போது இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து அவர் தவறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து ராசா மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தச் சூழலில் சர்ச்சையாக பேசிய ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ஆ.ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், ஆளுங்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ஆ.ராசா மீதான புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்ததாக கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜோசப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் வேண்டுமானால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...