பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பாண்டங்களை வழங்க கோரிக்கை - கோவை மாவட்ட ஆட்சியரிடம் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு

தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புகளுடன் மண்பானை, மண் அடுப்பு போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் தலையில் மண் அடுப்பு, மற்றும் பானைகளை சுமந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.



இதனையடுத்து, மண்பாண்ட தொழிலாளர்கள் நலனுக்காக புது பானையில் பொங்கல் இட களிமண்ணால் ஆன ஒரு அடுப்பும் புதுப்பானையையும் அரசு பொங்கல் பரிசாக வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பானை, அடுப்புடன் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மண்பாண்டங்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து இலவசமாக வழங்கினால், நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என தெரிவித்த மண்பாண்ட தொழிலாளர்கள், மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர், ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும் தமிழக அரசால் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

இதில் விவசாயிகள் நலனை பாதுகாக்கும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை அரசால் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.



இதேபோல பாரம்பரியமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மண்பானை மற்றும் மண் அடுப்புகளை அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தற்போது மண்பாண்ட தொழில் நலிந்து வரும் நிலையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியரும் பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...