கோவை ரயில்நிலையம் அருகேயுள்ள சாலையில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பள்ளம் - போக்குவரத்து பாதிப்பு

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் கடந்த ஜனவரியில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு பணிகள் முடிந்து சாலை அமைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு அந்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஸ்டேட்பாங்க் சாலையில் கடந்த ஜனவரி மாதம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டது. குடிநீர் குழாய் பதிக்கபட்ட பின்னர் குழி மூடப்பட்டு சாலை போடப்பட்டது. இதனிடையே கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ரயில் நிலையம் எதிரில் உள்ள சாலையில் நேற்றிரவு திடீரென பள்ளம் ஏற்பட்டது. சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள அந்த பள்ளத்தால் அவ்வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



அந்த திடீர் பள்ளத்தில் யாரும் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன.



குடிநீர் குழாய் பதித்த பின்பு சாலையை முறையாக போடாததன் காரணமாவே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டும் பொது மக்கள், உடனடியாக இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...