கோவை துடியலூர் அருகே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மூவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் அனைத்து பகுதிகளிலும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் துடியலூர் அடுத்த கே.என்.ஜி புதூர் பிரிவு அருகே குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அப்போது தப்பிக்க முயன்ற மூவரையும் போலீசார் மடக்கி பிடித்து, விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்டவர்கள் துடியலூரை சேர்ந்த ராம்நாத் (31), குருடம்பாளையம் ராம் விகாஷ் குமார் (30) மற்றும் என்.ஜி.ஓ காலணியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (30) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் வெவ்வேறு பணிகளை செய்து கொண்டு அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் துடியலூர் அடுத்த கே.என்.ஜி புதூர் பிரிவு அருகே குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அப்போது தப்பிக்க முயன்ற மூவரையும் போலீசார் மடக்கி பிடித்து, விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்டவர்கள் துடியலூரை சேர்ந்த ராம்நாத் (31), குருடம்பாளையம் ராம் விகாஷ் குமார் (30) மற்றும் என்.ஜி.ஓ காலணியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (30) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் வெவ்வேறு பணிகளை செய்து கொண்டு அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.