திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை சபாநாயகரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சிஜெயராமன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, அதிமுக இயக்கத்தைப் பொறுத்தவரை தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தலைவர்கள் செயலாளர்கள் என அனைவரும் வருவார்கள் போவார்கள் ஆனால் இயக்கம் என்றைக்கும் அசைக்க முடியாத இயக்கமாக உள்ளது.
அதற்கு ஒரே காரணம் தொண்டர்களின் ரத்தத்தாலும் சதையாலும் வியர்வையாலும் உருவான இயக்கம் தான் அதிமுக. மேலும் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் ஒரு மகளிரணி, ஒரு பாசறை, தொழில்நுட்ப பிரிவு மற்றும் அந்த பகுதியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.
அமைக்கப்படுகின்ற பூத் கமிட்டி மிகத் தெளிவாக இருக்க வேண்டும். கட்சியை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.கட்சியில் இணைந்தவர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் கட்சித் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், சிவசாமி, பழனிச்சாமி, நடராஜன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, அதிமுக இயக்கத்தைப் பொறுத்தவரை தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தலைவர்கள் செயலாளர்கள் என அனைவரும் வருவார்கள் போவார்கள் ஆனால் இயக்கம் என்றைக்கும் அசைக்க முடியாத இயக்கமாக உள்ளது.
அதற்கு ஒரே காரணம் தொண்டர்களின் ரத்தத்தாலும் சதையாலும் வியர்வையாலும் உருவான இயக்கம் தான் அதிமுக. மேலும் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் ஒரு மகளிரணி, ஒரு பாசறை, தொழில்நுட்ப பிரிவு மற்றும் அந்த பகுதியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.
அமைக்கப்படுகின்ற பூத் கமிட்டி மிகத் தெளிவாக இருக்க வேண்டும். கட்சியை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.கட்சியில் இணைந்தவர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் கட்சித் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், சிவசாமி, பழனிச்சாமி, நடராஜன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.