தொண்டர்களின் ரத்தத்தாலும், சதையாலும் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக - திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன்

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை சபாநாயகரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சிஜெயராமன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, அதிமுக இயக்கத்தைப் பொறுத்தவரை தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தலைவர்கள் செயலாளர்கள் என அனைவரும் வருவார்கள் போவார்கள் ஆனால் இயக்கம் என்றைக்கும் அசைக்க முடியாத இயக்கமாக உள்ளது.

அதற்கு ஒரே காரணம் தொண்டர்களின் ரத்தத்தாலும் சதையாலும் வியர்வையாலும் உருவான இயக்கம் தான் அதிமுக. மேலும் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் ஒரு மகளிரணி, ஒரு பாசறை, தொழில்நுட்ப பிரிவு மற்றும் அந்த பகுதியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.

அமைக்கப்படுகின்ற பூத் கமிட்டி மிகத் தெளிவாக இருக்க வேண்டும். கட்சியை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.கட்சியில் இணைந்தவர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் கட்சித் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்று அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், சிவசாமி, பழனிச்சாமி, நடராஜன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...