வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் யானைகளின் அட்டகாசம் - கடையை உடைத்து சூரையாடியது

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பு.


கோவை : வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளின் அதிகளவு நடமாட்டத்தால் மக்கள் எப்போதும் அச்சத்தில் உள்ளனர்.



வால்பாறை அருகேகூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருவதை அறிந்த வால்பாறை வியாபாரிகள் கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட கடைகளை உருவாக்கி அப்பகுதியில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

நேற்று இரவு ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்த யானையொன்று கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் இருநத செல்வராஜ் என்பவரின் கடையை உடைத்து உணவுப் பொருட்கள்மற்றும் பழங்கள் போன்றவை சாப்பிட்டு கடையை சேதப்படுத்தியுள்ளது.



அதிகாலையில் அப்பகுதி வழியாக பேருந்துகள் வருவதை அறிந்த காட்டு யானை கூழாங்கல் வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது.

ஆற்றுப்பகுதியில் கடைகளை சேதப்படுத்திய காட்டு யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...