வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பு.
கோவை : வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளின் அதிகளவு நடமாட்டத்தால் மக்கள் எப்போதும் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறை அருகேகூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருவதை அறிந்த வால்பாறை வியாபாரிகள் கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட கடைகளை உருவாக்கி அப்பகுதியில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
நேற்று இரவு ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்த யானையொன்று கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் இருநத செல்வராஜ் என்பவரின் கடையை உடைத்து உணவுப் பொருட்கள்மற்றும் பழங்கள் போன்றவை சாப்பிட்டு கடையை சேதப்படுத்தியுள்ளது.

அதிகாலையில் அப்பகுதி வழியாக பேருந்துகள் வருவதை அறிந்த காட்டு யானை கூழாங்கல் வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது.
ஆற்றுப்பகுதியில் கடைகளை சேதப்படுத்திய காட்டு யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வால்பாறை அருகேகூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருவதை அறிந்த வால்பாறை வியாபாரிகள் கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட கடைகளை உருவாக்கி அப்பகுதியில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
நேற்று இரவு ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்த யானையொன்று கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் இருநத செல்வராஜ் என்பவரின் கடையை உடைத்து உணவுப் பொருட்கள்மற்றும் பழங்கள் போன்றவை சாப்பிட்டு கடையை சேதப்படுத்தியுள்ளது.
அதிகாலையில் அப்பகுதி வழியாக பேருந்துகள் வருவதை அறிந்த காட்டு யானை கூழாங்கல் வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது.
ஆற்றுப்பகுதியில் கடைகளை சேதப்படுத்திய காட்டு யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.