கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள கிட்ஸ் பார்க் பள்ளியில் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கோவை : மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாள் மாணவர்கள் தினமாக நேற்று கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள கிட்ஸ் பார்க் பள்ளியில் மாணவ மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ , மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கண்டுபிடிப்புகளை கண்காட்சியாக வைத்திருந்தனர்.
மேலும் தமிழ் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பனை மற்றும் தென்னை ஓலைகளில் செய்யப்பட்ட கைகடிகாரம், குடை, விசிறி ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டது .

மேலும் பாரம்பரிய உணவான கம்பு ,கோதுமை, கூழ் வகையும் தானிய வகைகளும் மற்றும் தமிழ் கவிஞர்களின் கவிதைகளும் இந்த கண்காட்சியில் மாணவர்கள் வைத்திருந்தனர். இந்த கண்காட்சிகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் பார்த்து ரசித்துச் சென்றனர்.
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் டி.எல். சிங் மற்றும் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள கிட்ஸ் பார்க் பள்ளியில் மாணவ மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது.
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ , மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கண்டுபிடிப்புகளை கண்காட்சியாக வைத்திருந்தனர்.
மேலும் தமிழ் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பனை மற்றும் தென்னை ஓலைகளில் செய்யப்பட்ட கைகடிகாரம், குடை, விசிறி ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டது .
மேலும் பாரம்பரிய உணவான கம்பு ,கோதுமை, கூழ் வகையும் தானிய வகைகளும் மற்றும் தமிழ் கவிஞர்களின் கவிதைகளும் இந்த கண்காட்சியில் மாணவர்கள் வைத்திருந்தனர். இந்த கண்காட்சிகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் பார்த்து ரசித்துச் சென்றனர்.
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் டி.எல். சிங் மற்றும் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.