திமுக எம்.பி. ஆ.ராசா வருகைக்கு எதிர்ப்பு - கோவையில் பாஜக மகளிரணியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கோவைக்கு வருகை தரும் ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி தலைமையில், கோவை நேரு நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று கோவைக்கு வருகை தரவுள்ளார். விமானம் மூலம் கோவைக்கு வரும் ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்க விமான நிலையத்தில் திமுக சார்பில்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆ.ராசா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகர பாஜக மகளிரணி சார்பில், நேரு நகர் பகுதியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பாஜக மாநில பாஜக இளைஞரணி செயலாளர், பிரீத்தி லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 20க்கும் மேற்பட்ட பாஜக மகளிரணியினர் திரண்டு ஆ.ராசா எம்.பி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், ஆ.ராசா தொடர்ந்து இந்து சமுதாயத்தையும், இந்து பெண்களையும் இழிவாக பேசி வருவதாக குற்றம் சாட்டினர்.

இதனிடையே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

பாஜக மகளிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...