திமுக எம்.பி. ஆ.ராசா வருகைக்கு எதிர்ப்பு - கோவையில் பாஜக மகளிரணியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கோவைக்கு வருகை தரும் ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி தலைமையில், கோவை நேரு நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று கோவைக்கு வருகை தரவுள்ளார். விமானம் மூலம் கோவைக்கு வரும் ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்க விமான நிலையத்தில் திமுக சார்பில்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆ.ராசா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகர பாஜக மகளிரணி சார்பில், நேரு நகர் பகுதியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பாஜக மாநில பாஜக இளைஞரணி செயலாளர், பிரீத்தி லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 20க்கும் மேற்பட்ட பாஜக மகளிரணியினர் திரண்டு ஆ.ராசா எம்.பி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், ஆ.ராசா தொடர்ந்து இந்து சமுதாயத்தையும், இந்து பெண்களையும் இழிவாக பேசி வருவதாக குற்றம் சாட்டினர்.

இதனிடையே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

பாஜக மகளிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...