கோவை போத்தனூர் அருகே ரயில் மோதி எருமை மாடு உயிரிழந்த சோகம்..!

போத்தனூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எருமை மாட்டின் மீது கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே எருமை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.


கோவை: கோவை - மதுரை இடையே விரைவு ரயில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் கோவை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலானது பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

இதனிடையே அந்த ரயிலானது, போத்தனூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் வந்து அங்கிருந்து கிளம்பியது. இந்நிலையில் மேட்டூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற எருமை மாட்டின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.



இதில், எருமை மாடு,ரயிலின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார், சக்கரத்தில் சிக்கிய எருமை மாட்டின் உடலை மீட்டனர்.

இதன் காரணமாக கோவை - மதுரை இடையே செல்லும் விரைவு ரயில் சுமார் 15 நிமிடத்திற்கும் மேல் அதே இடத்தில் நிறுத்தப்பட்டு, மீண்டும் மதுரை நோக்கி புறப்பட்டு சென்றது.



2 நாட்களுக்கு முன்பு குட்டியுடன் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில், தற்போது, எருமை மாடு உயிரிழந்த சம்பவம் வன உயிரியல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வனவிலங்குகள் ரயில்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் மேலும், நிகழாமல் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...