கோவையில் இந்தி திணிப்பு, பொது நுழைவுத் தேர்வை கண்டித்து திமுக சார்பில் பிரதமருக்கு புறா மூலம் தூதுவிட்டு நூதன ஆர்ப்பாட்டம்.

இன்று தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: இந்தி திணிப்பு, நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று தமிழகம்முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து, கோஷங்களை எழுப்பினர். இந்தி திணிப்புக்கு எதிராகவும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதமருக்கு இந்தி திணிப்பை கண்டித்தும், ஒரே பொது நுழைவு தேர்வைதிரும்ப பெற வலியுறுத்தியும், புறா மூலம் தூதுவிடும் விதமாக புறா பறக்கவிடப்பட்டது.



இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் பேசியதாவது, இந்தியாவின் ஒற்றுமையையும், பண்பாட்டையும் சிதைக்கும் அரசாக பாஜக அரசு உள்ளது. மொழி, கலாச்சாரம், பண்பாட்டை கொண்ட நாட்டை மாற்றி இந்தி தான் இந்தியா என்று பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.



ஒன்றிய பாஜக அரசு உடனடியாக இந்த கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இது மாபெரும் வெற்றி போராட்டமாக மாறி உள்ளது. மொழி திணிப்பால் ஏற்படும் புரட்சியின் வெற்றி போராட்டமாகவும் இது அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...