கோவையில் காப்பகத்தில் உள்ள குழந்தையை வீட்டுக்கு அனுப்ப சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் ரூ.5,000 லஞ்சம் கேட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தனது குழந்தையை அழைத்துச் செல்ல ஒரு குழந்தையின் பெற்றோர்,விண்ணப்பித்து உள்ளனர்.
அப்போது, அதற்கான சான்றிதழை வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை புகார்தாரரிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட நபர்களிடம் கொடுக்க சொல்லி அனுப்பியுள்ளனர்.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு சென்ற பெற்றோர்,குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமிடம் ரூ.5,000 கொடுத்துள்ளனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமியை கையும் களவுமாக பிடித்தனர். மேலும்,தனலட்சுமி மற்றும் சட்ட உதவியாளர் கார்த்திக் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
காப்பகத்தில் இருந்து குழந்தையை அழைத்துச் செல்ல ரூ.5,000 லஞ்சம் வாங்கிய குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்போது, அதற்கான சான்றிதழை வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை புகார்தாரரிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட நபர்களிடம் கொடுக்க சொல்லி அனுப்பியுள்ளனர்.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு சென்ற பெற்றோர்,குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமிடம் ரூ.5,000 கொடுத்துள்ளனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமியை கையும் களவுமாக பிடித்தனர். மேலும்,தனலட்சுமி மற்றும் சட்ட உதவியாளர் கார்த்திக் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
காப்பகத்தில் இருந்து குழந்தையை அழைத்துச் செல்ல ரூ.5,000 லஞ்சம் வாங்கிய குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.