கோவையில் சான்றிதழ் வழங்க ரூ.5000 லஞ்சம் பெற்ற குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் இருவர் கைது - லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை.

கோவையில் காப்பகத்தில் உள்ள குழந்தையை வீட்டுக்கு அனுப்ப சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் ரூ.5,000 லஞ்சம் கேட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தனது குழந்தையை அழைத்துச் செல்ல ஒரு குழந்தையின் பெற்றோர்,விண்ணப்பித்து உள்ளனர்.

அப்போது, அதற்கான சான்றிதழை வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை புகார்தாரரிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட நபர்களிடம் கொடுக்க சொல்லி அனுப்பியுள்ளனர்.

அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு சென்ற பெற்றோர்,குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமிடம் ரூ.5,000 கொடுத்துள்ளனர்.



அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமியை கையும் களவுமாக பிடித்தனர். மேலும்,தனலட்சுமி மற்றும் சட்ட உதவியாளர் கார்த்திக் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

காப்பகத்தில் இருந்து குழந்தையை அழைத்துச் செல்ல ரூ.5,000 லஞ்சம் வாங்கிய குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...