கோவை மேற்கு மண்டல பகுதிகளில்‌ நடைபெறும் தூய்மை பணிகளை மாவட்ட ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு.!

பி.என்‌.புதூர்‌, வீராசாமி காலனி, ராதிகா அவென்யூ ஆகிய பகுதியில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நில அளவை செய்து மாநகராட்சி நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகரமைப்பு அலுவலருக்கு மாவட்ட ஆணையாளர்‌ உத்தரவு.!


கோவை: மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 41-க்குட்பட்ட பி.என்‌.புதார்‌, வீராசாமி காலனியில்‌ உள்ள சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகள்‌, பிறப்பு இறப்பு பதிவேடு, புகார்‌ பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

வீராசாமி காலனி, ராதிகா அவென்பூ ஆகிய பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்,



அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.

அதனைத்தொடர்ந்து, பி.என்‌.புதூர்‌, வீராசாமி காலனி, ராதிகா அவென்யு, ஆகிய பகுதியில்‌ மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌ வீடுவீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவதையும்‌, தேவையில்லாத பொருட்களை அகற்றும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதையும்‌, பொது மக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் அப்பகுதியில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நில அளவை செய்து மாநகராட்சி நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறுமாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல தலைவா்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்‌ சாந்தி, உதவி ஆணையாளர்‌ சேகர்,உதவி செயற்பொறியாளர்‌ . ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலா்‌ கலாவதி, சுகாதார அலுவலர்‌ பரமசிவம்‌, உதவி பொறியாளார்கள்‌ரவிக்கண்ணன்‌, முரளிதரன்‌, சுகாதார ஆய்வாளா்‌ ராஜேந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தார்கள்‌.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...