செல்வபுரம் அருகே தீபாவளி போனஸ் மற்றும் சம்பளத்தை வீட்டில் வைத்து விட்டு வேலைக்கு சென்ற குடியிருந்த பெண்ணின் வீட்டில் மாற்று சாவி போட்டு திறந்து பணத்தை திருடிய வீட்டின் உரிமையாளர் மகன் அசோக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: செல்வபுரம் சண்முக ராஜபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பவித்ரா (வயது 29) . டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் பவித்ரா வேலை செய்யும் நிறுவனத்தில் தீபாவளி போனஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் பணத்தை பவித்ரா வீட்டு பீரோவில் வைத்திருந்தார்.
நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த போனஸ் பணம் ரூ 15 ஆயிரத்தை காணவில்லை. ஆனால் வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்படவில்லை. பணம் மட்டுமே காணாமல் போயிருப்பதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பவித்ரா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரை பதிவு செய்த செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சின்னராஜ், பவித்ரா வசிக்கும் வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையின் அடிப்படையில் முருகேசனின் மகனான அசோக்குமார் (43) மாற்று சாவி போட்டு பவித்ரா வீட்டை திறந்து பணத்தை திருடியதாக தெரியவந்தது.
பவித்ரா வேலைக்கு சென்ற பிறகு அசோக் குமார் வீட்டில் இருந்த மாற்று சாவியை போட்டு வீட்டை திறந்து பணத்தை திருடியதாக தெரியவந்தது. புலன் விசாரணையில் ஈடுபட்ட போலிஸார் அசோக் குமாரை கைது செய்தனர்.
இந்த நிலையில் பவித்ரா வேலை செய்யும் நிறுவனத்தில் தீபாவளி போனஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் பணத்தை பவித்ரா வீட்டு பீரோவில் வைத்திருந்தார்.
நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த போனஸ் பணம் ரூ 15 ஆயிரத்தை காணவில்லை. ஆனால் வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்படவில்லை. பணம் மட்டுமே காணாமல் போயிருப்பதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பவித்ரா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரை பதிவு செய்த செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சின்னராஜ், பவித்ரா வசிக்கும் வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையின் அடிப்படையில் முருகேசனின் மகனான அசோக்குமார் (43) மாற்று சாவி போட்டு பவித்ரா வீட்டை திறந்து பணத்தை திருடியதாக தெரியவந்தது.
பவித்ரா வேலைக்கு சென்ற பிறகு அசோக் குமார் வீட்டில் இருந்த மாற்று சாவியை போட்டு வீட்டை திறந்து பணத்தை திருடியதாக தெரியவந்தது. புலன் விசாரணையில் ஈடுபட்ட போலிஸார் அசோக் குமாரை கைது செய்தனர்.