கோவை வேளாண் பல்கலை., நிகழ்ச்சியில் பா.ஜ.க மாவட்ட தலைவருக்கு மேடையில் இடம் - தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டனம்…!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில், மேடையில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி -க்கும் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்று தபெதிக கோரிக்கை வைத்துள்ளது.



கோவை: பா.ஜ.க மாவட்ட தலைவருக்கு அரசு நிகழ்ச்சியில் மேடையில் இருக்கை வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று "உழவர்கள் கூட்டம்" நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



அரசு விழாவான இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியும் வந்திருந்தார்.



அவருக்கும் நிகழ்ச்சி மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் பிரதிநிதியாக இல்லாமல், ஒரு கட்சி சார்பில் கலந்து கொண்டவருக்கு பல்கலைக்கழகம் எப்படி மேடையில் இடம் கொடுத்தது என்று பல்வேறு அமைப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சரும், மாநில அமைச்சரும் கலந்து கொண்டிருக்கின்ற விழாவில், மேடையில் எந்த அரசுப் பொறுப்பிலும், இல்லாத கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் உத்தம ராமசாமி அமர்ந்துள்ளார்.

இதை அரசு விதிகள், பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கின்றதா? அரசு விழாவில் ஒரு அரசியல் கட்சியின் விழாவாக மாற்றிய பல்கலைக்கழக நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசு உடனடியாக இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு விழாவில் மேடையில் பிஜேபி மாவட்ட தலைவரை அனுமதித்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...