கோவையில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) தலைமை அலுவலகத்திற்கு சீல்..! - வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், கோவை கோட்டைமேட்டில் உள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் இன்று பூட்டி சீல் வைத்தனர்.



கோவை: மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது.

நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல், அதற்கு நிதியளித்தல், கொடூரமாக கொலைகள் செய்தல் போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது எனக்கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.



அதன் தொடர்ச்சியாக கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) தலைமை அலுவலகத்திற்கு தெற்கு வாட்டாச்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

முன்னதாக, உக்கடம் சரக காவல்துறை உதவி ஆணையாளர் வீரபாண்டி தலைமையில் சென்ற அதிகாரிகள் அலுவலகத்தில் இருத்த ஆவணங்கள், பொருட்கள் ஆகியவற்றை சரி பார்த்து பதிவு செய்தனர்.



அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பிறகு வட்டாச்சியர் சரண்யா முன்னிலையில் PFI தலைமை அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...