கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது…! - மாநகர காவல் ஆணையாளர் உத்தரவு

கடந்த 22 ஆம் தேதி கோவை பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சதாம் உசேன் (32) மற்றும் அகமது சிகாபுதீன் (24), கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் மீதும், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கனவே, சிறையில் உள்ள இருவரிடமும் இது குறித்தான நகல் இன்று வழங்கப்பட்டது.



கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த 22 ஆம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர்.



இதைத்தொடர்ந்து ஒப்பனக்காரர் விதி, 100 அடி சாலை, குனியமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதால் கோவை மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும் மாநகர் பகுதியில் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கோவையில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் இந்து அமைப்பினரின் வாகனங்களை தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதில், கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய கவுண்டம்பாளையம், சேரன் காலனியைச் சேர்ந்த சதாம் உசேன் (32), மற்றும் துடியலூர் ஆர்.எஸ்.தோட்டம், நேரு வீதியைச் சேர்ந்த அகமது சிகாபுதீன் (24), ஆகிய இருவர் மீதும் சி1 காட்டூர் காவல் நிலையத்தில் u/s 153 (A), 285 IPC @ 153 (A), 436, 511 IPC & 3 of Explosive Substance Act ன் படி பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் படி கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் ஆகிய இருவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் இன்று வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...