ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் காலதாமதம் ஏற்றுக் கொள்ள முடியாதது - திருப்பூரில் அமைச்சர் மு பெ. சாமிநாதன்

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி அமைச்சர், தோண்டப்பட்ட சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் இருந்தால், சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அவற்றை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்தந்த ஒப்பந்ததாரர்களிடம் உடனுக்குடன் அழுத்தம் கொடுத்து பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் காலதாமதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒப்பந்ததாரர்களை ஆணையாளர் நேரில் வரவழைத்து தாமதத்திற்கான காரணங்களை கேட்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எள்ளளவும் காலதாமதம் ஏற்றுக் கொள்ள முடியாதது.

பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனுக்குடன் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல, பல்வேறு இடங்களில் தெருவிளக்கு எரிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவற்றை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் பேருந்து நிலைய பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.



இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட ஆட்சியர் வினீத், மண்டல தலைவர்கள், மண்டல அலுவலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...