கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்; வாகன ஓட்டி மீது வழக்கு

குப்பையை கொட்டிவிட்டு நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில், ஆவலப்பம்பட்டி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு காணியாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி பார்வதி (68).

கடந்த 6ஆம் தேதி மாலை வீட்டின் எதிரே உள்ள குப்பை தொட்டியில் குப்பையை கொட்டி விட்டு நின்று கொண்டிருந்தவர் மீது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த மூதாட்டி பார்வதியை மீட்ட உறவினர்கள் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி வந்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்று புதன்கிழமை இரவு புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார் விபத்தை ஏற்படுத்திய பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி பகுதியை சேர்ந்த யுவராஜ் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...