ஊட்டியில் இருந்து கேரளாவுக்கு கேரட்டுகளை ஏற்றி வந்த பிக்கப் ட்ரக், நேற்று நள்ளிரவு கே ஜி சாவடி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மூன்று மின் கம்பங்கள் மீது மோதி நின்றது.
கோவை: ஊட்டியை சேர்ந்தவர் டேனியல் (23). இவர் வழக்கமாக ஊட்டியில் இருந்து கேரளாவிற்கு கேரட் லோடு ஏற்றி செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று வழக்கம் போல கேரட் லோடு ஏற்றிக்கொண்டு இரவு ஊட்டியில் இருந்து கேரளா மாநிலம் சொரணூர் நோக்கி கிளம்பியுள்ளார். அப்போது, நள்ளிரவு 12.30 மணியளவில் ஜே.ஜி.சாவடி - வேலந்தாவளம் வீரப்பனூர் அருகே வந்த போது, டேனியல் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது.

இதனால் சாலையில் ஒரு வளைவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன், சாலை ஓரத்தில் இருந்த அடுத்தடுத்த 3 கம்பங்கள் மீது மோதி நின்றது.

இதில், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் டேனியல் மற்றும் உடன் வந்த இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று வழக்கம் போல கேரட் லோடு ஏற்றிக்கொண்டு இரவு ஊட்டியில் இருந்து கேரளா மாநிலம் சொரணூர் நோக்கி கிளம்பியுள்ளார். அப்போது, நள்ளிரவு 12.30 மணியளவில் ஜே.ஜி.சாவடி - வேலந்தாவளம் வீரப்பனூர் அருகே வந்த போது, டேனியல் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது.
இதனால் சாலையில் ஒரு வளைவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன், சாலை ஓரத்தில் இருந்த அடுத்தடுத்த 3 கம்பங்கள் மீது மோதி நின்றது.
இதில், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் டேனியல் மற்றும் உடன் வந்த இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதையடுத்து, தகவலறிந்து வந்த கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.