வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு கிணத்துக்கடவு வருவாய் துறையில் தேசிய பேரிடர் குறைப்பு நாளை கடைபிடிக்கும் வகையில் இன்று பேரிடர் மேலாண்மை விழிப்புணர் பேரணி நடத்தப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் இன்று பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது பேரிடர் பாதிப்புகளை தடுக்கும் வகையில் தேசிய பேரிடர் குறைப்பு நாளை கடைபிடிக்கும் வகையில் இன்று நடத்தப்பட்டது. இப்பேரணியை கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா இன்று துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியானது கோவை சாலை, பழைய பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை வழியாக வந்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் முடிவடைந்தது. இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்
வடகிழக்கு பருவமழையின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க முன் கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான பாதைகள் ஏந்தியபடி இப்பேரணி நடைபெற்றது
இந்த விழிப்புணர்வு பேரணியானது கோவை சாலை, பழைய பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை வழியாக வந்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் முடிவடைந்தது. இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்
வடகிழக்கு பருவமழையின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க முன் கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான பாதைகள் ஏந்தியபடி இப்பேரணி நடைபெற்றது