மது மற்றும் கள்ளச்சாராயம் குறித்து கோவையில் விழிப்புணர்வு பேரணி



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (03.02.2017) தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட கலால் துறை மூலம் மதுப்பழக்கம் மற்றும் கள்ளச்சாரயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி காவல் ஆணையர் அலுவலகம் வழியாக வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது. 

இப்பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கள்ளச்சாராய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், விழிப்புணர்வு வாசகங்களை கூறியபடியும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் சென்றனர். 

முன்னதாக கிராமிய கலைஞர்களின் விழிப்புணர்வு வீதி நாடகமும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பின்னர், வ.உ.சி மைதானத்தில் மாணவ மாணவியர்களுக்கு மதுவினால் உடலில் உண்டாகும் தீமைகள் குறித்தும் மருத்துவர்களால் விளக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து மருத்துவ முகாம்களும் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் (கலால்) து.வெங்கடேசன், மாவட்டட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) நூர்முகம்மது, கோட்ட கலால் அலுவலர்கள் ஜெயசித்ரா, ருக்மணி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...