கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்றை கண்ட தேயிலை தோட்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டு காட்டு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
நீலகிரி: கோத்தகிரி சுற்றுவட்டார தேயிலை எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்துடனே பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கோத்தகிரி அடுத்த கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பிக்காபதி பிரிவு, பெரகனி நெடுகுளா கிராமத்தில் குடியிருப்புகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது.
இதை கண்டு அதிர்ச்சியான தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து வனசரகர் செல்வகுமார் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் குட்டன், வன காவலர் ராஜேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இதனை தொடர்ந்து, தேயிலை தோட்டத்தில் படுத்து கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்துச் சென்றனர். பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.
இந்நிலையில், கோத்தகிரி அடுத்த கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பிக்காபதி பிரிவு, பெரகனி நெடுகுளா கிராமத்தில் குடியிருப்புகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது.
இதை கண்டு அதிர்ச்சியான தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து வனசரகர் செல்வகுமார் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் குட்டன், வன காவலர் ராஜேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இதனை தொடர்ந்து, தேயிலை தோட்டத்தில் படுத்து கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்துச் சென்றனர். பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.