கோவை பொள்ளாச்சி அடுத்த ஜோதி நகர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புகளின் சுவற்றில் ஏறி திருட முயன்ற நபரை, மடக்கி பிடித்த பொதுமக்கள், கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து, கோவை கிழக்கு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி ஜோதி நகர் அருகே உள்ள குறிஞ்சி நகர் மற்றும் லட்சுமி நகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில், மர்ம நபர்கள் இருவர், வீடுகளின் காம்பவுண்ட் சுவர்கள் மீது ஏறி குதித்து திருடன் முயன்றுள்ளனர்.
இதனிடையே சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பொதுமக்கள், கூச்சலிட்டதும் இருவரும் தப்பி ஓட முயன்றனர். இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் இருவரையும் துரத்திச் சென்றதில் ஒருவன் தப்பியோடிய நிலையில் மற்றொருவனை பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவனை அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள், அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவை கிழக்கு காவல் நிலைய போலீசார், பிடிபட்ட திருடனிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கும்பகோணம், திருவடைமருதூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பொதுமக்கள், கூச்சலிட்டதும் இருவரும் தப்பி ஓட முயன்றனர். இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் இருவரையும் துரத்திச் சென்றதில் ஒருவன் தப்பியோடிய நிலையில் மற்றொருவனை பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவனை அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள், அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவை கிழக்கு காவல் நிலைய போலீசார், பிடிபட்ட திருடனிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கும்பகோணம், திருவடைமருதூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.