கோவை விமான நிலையத்துக்கு செல்போனில் தொடர்பு கொண்ட பெண், தமிழகத்தில் உள்ள தாஜ் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், போலீசாரின் விசாரணையில் அவர் தஞ்சையை சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது
கோவை: கோவை விமான நிலையத்தில் உள்ள ஒரு விமான நிறுவன அலுவலகத்துக்கு பெண் ஒருவர், செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், கோவை, மதுரை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள தாஜ் ஓட்டல்களுக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படியும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என்று எச்சரித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விமான நிறுவன அலுவலக ஊழியர்கள், இதுகுறித்து கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, போலீசார் அந்தப் பெண் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், அந்த பெண் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்று போலிசாருக்கு தெரியவந்தது.
இதனிடையே அந்த பெண்ணின் கணவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும்
தெரியவந்தது.
மேலும், அந்த பெண் நிதானமற்ற நிலையில் கோவையில் உள்ள விமான நிறுவனத்துக்கு செல்போனில் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்த நிலையில் அந்த பெண்ணை போலீசார் எச்சரித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விமான நிறுவன அலுவலக ஊழியர்கள், இதுகுறித்து கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, போலீசார் அந்தப் பெண் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், அந்த பெண் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்று போலிசாருக்கு தெரியவந்தது.
இதனிடையே அந்த பெண்ணின் கணவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும்
தெரியவந்தது.
மேலும், அந்த பெண் நிதானமற்ற நிலையில் கோவையில் உள்ள விமான நிறுவனத்துக்கு செல்போனில் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்த நிலையில் அந்த பெண்ணை போலீசார் எச்சரித்தனர்.