ஒடையகுளம் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடிய ஆறு பேர் கைது - 2500 ரூபாய் பணம் பறிமுதல் செய்த போலிஸார்

ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கௌதம் தலைமையில் ஒடையகுளத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடிய ஆறு பேர் கைது சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடிய ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆனைமலை போலீசார் விசாரணை.


கோவை: பொள்ளாச்சி அருகே‌ ஒடையகுளம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் எனப்படும் சீட்டாட்டம் விளையாடுவதாக ஆனைமலை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கௌதம் தலைமையில் சென்ற போலீசார் ஒடையகுளம்‌ பகுதியில் வசிக்கும் திருமலைசாமி என்பவர் வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஆறு பேர் பணம் வைத்து சட்ட விரோதமாக சீட்டாட்டம் விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அங்கு சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருந்த ஒடையகுளம் பகுதி சேர்ந்த திருமலைசாமி(68), தண்டபாணி(62), மணிகண்டன்(50), செந்தில்குமார்(42), ஆனைமலை பகுதி சேர்ந்த ஆனந்த வடிவேல்(41), வேட்டைக்காரன் புதூர் பகுதி சேர்ந்த செல்வராஜ்(44) ஆகிய ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் சீட்டாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2,500 ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டாட்டம் விளையாட ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...