தெற்கு மண்டல குறிச்சி குளத்தில்‌ நடைபெறும் சீர்மிகு நகர திட்டங்களை மாவட்ட ஆணையாளர்‌ மு.பிரதாப் நேரில் சென்று ஆய்வு

கணேசபுரம்‌ பகுதியிலுள்ள அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை நேரில்‌ சென்று பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்‌ கட்டுமான பணிகளை விரைவாக செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.


கோவை: தெற்கு மண்டலம்‌ குறிச்சி குளத்தில்‌ சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்‌ ரூ.52.16 கோடி மதிப்பீட்டில்‌ பல்வேறு பணிகள்‌ நடைபெற்று வருகிறது. அதன்‌ ஒரு பகுதியாக உலக தரத்தில்‌ திருவள்ளுவர்‌ சிலை அமைத்தல்‌, தமிழர் கலாச்சாரத்தை விளக்கும்‌ வகையில்‌ ஜல்லிக்கட்டு காளை, பாரம்பரிய கலாச்சார ஓவியங்கள்‌, சிலைகள்‌ அமைத்தல்‌, வண்ண மின்விளக்கு அமைத்தல்‌ மற்றும்‌ நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செயல்பட்டு வருகின்றன.



மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ இன்று குறிச்சி குளத்தில்‌ நடைபெறும் சீர்மிகு நகர திட்டங்களை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிலைகள்‌ அமைத்தல்‌, பாரம்பரிய சின்னங்கள்‌ அமைக்கும்‌ பணிகளுக்கான மாதிரிகள்‌ தயாரித்து முறையாக ஓப்புதல்‌ பெற்று நிறுவவேண்டுமெனவும்‌, பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத் தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.100-க்குட்பட்ட போத்தனூர்‌ பகுதியில்‌ பயன்பாட்டில்‌ இல்லாத நுண்ணுயிர்‌ உரம்‌ (Micro Compost center) தயாரிக்கும்‌ மையத்தை பார்வையிட்டவர் பின்னர் கணேசபுரம் மேட்டூர்‌ கால்வாயில்‌ ரூ.8.2 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 2.2 கிலோ மீட்ட தொலைவிற்கு நடைபெறும் தூர்வாரும்‌ பணியினையும் நேரில்‌ ஆய்வு செய்து செய்தார் பணிகளை விரைவாக செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளார்களுக்கு அறிவுறுத்தினார்‌.



முன்னதாக, கணேசபுரம்‌ பகுதியிலுள்ள அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டமான பணிகளை விரைவாக செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர்‌ முருகேஷ்‌, தெற்கு மண்டல தலைவா்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைர் கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அஸ்லாம்‌ பாஷா, குணசேகரன்‌, உதவி ஆணையாா்‌ தஅண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலா்‌ சத்யா, உதவி பொறியாளர்கள்‌ சபரீசன்‌, சரவணக்குமார்‌, சதீஷ்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தார்கள்‌.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...