அரசுப் பள்ளிகளுக்கு ரூ.27 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிப்பு இயந்திரங்கள் வழங்கியது கோவை தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை

குடிநீர் மூலம் பரவும் பெரும் தொற்று நோய்களைக் கருத்தில் கொண்டு ரூ.27 லட்சம் செலவில் குளிர்ந்த மற்றும் சாதாரண நீர் வசதிகொண்ட 64 நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிப்பு இயந்திரங்கள தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கியது.


கோவை: ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள தன்னுடைய 16 கண் மருத்துவமனைகள் மூலம் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக கண் மருத்துவ சேவையில் செயல்பட்டு வருகிறது.

நேத்ர ஜோதி அறக்கட்டளையின் கீழ் கோவையில் உள்ள ராஜலட்சுமி நேத்ராலயா மற்றும் திருப்பூரில் உள்ள திருமூர்த்தி நேத்ராலயா ஆகிய தொண்டு மருத்துவமனைகள் மூலம் ஏழைகளுக்கு இலவச கண் சிகிச்சை அளித்து சமூக சேவையில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளையின் கீழ் தி ஐ ஃபவுண்டேஷன் இலவச கண் புரை அறுவை சிகிச்சை மற்றும் விரிவான கண் சிகிச்சை வழங்குவதற்காக பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இலவச கண் சிகிச்சை முகாம்களை தவறாமல் நடத்தி வருகிறது.

இவ்வாறு மக்கள் சேவையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய அரசுப் பள்ளிகளுக்கு ரூ.27 லட்சம் செலவில் 64 குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிப்பு இயந்திரங்கள் வழங்கியது.

சமூக சேவை ஈடுபாட்டின் தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாத வகையில், குடிநீர் மூலம் பரவும் பெரும் தொற்று நோய்களைக் கருத்தில் கொண்டு, தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் ரூ.27 லட்சம் செலவில் குளிர்ந்த மற்றும் சாதாரண நீர் வசதிகொண்ட 64 நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிப்பு இயந்திரங்களை அரசுப் பள்ளிகளுக்கு இன்று வழங்கியது.

இதனை தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். டி. ராமமூர்த்தி, தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி ஆகியோர் 64 குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிப்பு இயந்திரங்களை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் அவர்களிடம் வழங்கினார்.

இன்று வழங்கபட்ட இந்த இயந்திரங்களை, தி ஐ ஃபவுண்டேஷன் தனது சொந்த செலவில் அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பராமரிக்கும் பணியிலும் ஈடுபடும் எனவும் தெரிவித்தது. இந்த நிகழ்ச்சியில் தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். டி. ராமமூர்த்தி, தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் சித்ரா ராமமூர்த்தி, மேலும் மருத்துவர்கள், ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...